×

டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு துறைகளில் 1,163 பேர் தேர்வு

சென்னை: டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப 1,163 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) மூலம் கடந்த 8.3.2024 முதல் 30.4.2024 வரையிலான காலத்தில் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 1ல் அடங்கிய பதவிகளுக்கு 94 பேரும், குரூப் 2வில் அடங்கிய பதவிகளுக்கு 47 பேரும், ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 851 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதேபோல, தொகுதி-5ஏ தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கு 165 பேருமாக மற்றும் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப மொத்தம் 1,163 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

The post டிஎன்பிஎஸ்சி மூலம் பல்வேறு துறைகளில் 1,163 பேர் தேர்வு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,CHENNAI ,Tamil Nadu Public Service Selection Commission ,Civil Services Group ,Dinakaran ,
× RELATED வேளாண்மை அலுவலர் உள்ளிட்ட...